Ind vs SA 1st T20- கேட்சை விட்டார் அய்யர், அதற்கான விலையைக் கொடுக்கச் செய்தேன் – வாண்டெர் டஸன்
இந்தியா தோற்றதற்கு யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும் என்றால் அது ஷ்ரேயஸ் அய்யராகத்தான் இருக்க முடியும். அவர் வாண்டெர் டஸன் 30 பந்துகளில் 29 என்று தடவிக்கொண்டிருந்த போது 16வது ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கேட்சை விட்டார், கேட்சஸ் வின் மேட்சஸ் மட்டுமல்ல, கேட்ச் ட்ராப் செய்தால் ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டியதுதான் ஏனெனில் அவர் கேட்சை விட்டதால்தான் நேற்று தென் ஆப்பிரிக்கா வென்றது. நன்றி









