ரெம்டெசிவிர் – ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?
ரெம்டெசிவிர்… எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்தியாவே இந்த மருந்துக்காக அடித்துக்கொண்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதைச் செலுத்தினால் உடலில் வைரஸ் அளவு குறைந்து நோய்ச்சீற்றம் தணிகிறது என்று மருத்துவ உலகம் சொன்னது. ஒரே ஒரு டோஸ் ரெம்டெசிவிர் வாங்க பல மணி நேரம் மக்கள் க்யூவில் நின்றார்கள். இது கிடைக்காததால் பலர், தாங்கள் நேசித்த உறவுகளை இழந்தார்கள்.பல ஊர்களில் கள்ளச்சந்தையில் இதைக் கொள்ளை விலைக்கு விற்றார்கள். போலி ரெம்டெசிவிரைச் செலுத்தி பணம்…








