`தற்போது பரவும் பிஏ4, பிஏ5 ஒமிக்ரான் வேகமானது; முகக்கவசம் அவசியம்!' – சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.பண்ணைக்காடு மருத்துவமனையில் ஆய்வுஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்…








