இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகையில் தடுப்பை உடைத்த போராட்டக்காரர்கள் – கண்ணீர் புகை வீச்சு
9 ஜூலை 2022, 05:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.இன்று அரசுக்கு…








