School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை
கனமழை காரணமாக புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அறிவித்தார். இதேபோல, தொடர் மழையின் காரணமாக…






