அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் அளித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சகட்ட பிரச்னை எழுத்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென ஓ.பன்னீர்செல்வம் சென்றதால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம்…






