விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி – பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!
கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல்…









