எல்லாவற்றையும் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பிறகு உங்களுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்களது ஃபோனிற்கு மெசேஜ் வரும்.
அதன் பின் இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று சரிபார்க்கப்பட்டு, 10 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கப்பெறும்.
அப்ளை செய்யும்போது உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் acknowledgement slip-ல் உள்ள எண்ணை வைத்து, சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய சாதிச் சான்றிதழை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது, தேவைப்படும் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று அவர்களின் உதவி பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள தாசில்தார் அலுவலகங்களும் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.