மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவர் எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக் கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர்.
`குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவுக்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்” அல்லது `ஹைபோநெட்ரீமியா’ என்ற நிலை ஏற்படலாம்.
இது உங்களது ரத்தத்தின் சோடியம் அளவை நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் மூளை செல்கள் உட்பட உயிரணுக்களின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.