Browsing: அரசியல்

இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு: ஒருமனதாக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம்…

கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு எப்படி வருகிறது, எங்கு பதுக்கப்படுகிறது, வேறு எங்கே கடத்தப்படுகிறது என்பதை முதலில் கண்டறிய தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக வேண்டும். Source link

இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : சபாநாயகருக்கு பாஜக கடிதம்!!

டெல்லி : இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. அதானி, மோடி இடையேயான நட்பு குறித்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்த நிலையில், இங்கிலாந்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக கட்சி தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்து நாடாளுமன்ற…

மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருப்பூர்: மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய  முன்னாள் அமைச்சர் RB.உதயக்குமாரை எம், எல்,ஏவை  தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய அரசு NIA புலன் விசாரணையை துவக்கிட கோரிக்கை வைத்து அஇஅதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் இருவர் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்களால் பரபரப்பு நிலவியுள்ளது.கடந்த சில நாட்களாக முன்பு சிவகங்கையில்  நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி…

பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டக்கூடாது: பாஜவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜவுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றனர். 22 மாதங்களுக்கு பிறகும் ரகசியம் சொல்லாமல் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை…

சொல்லிட்டாங்க…

* அதானி விவகாரம் குறித்த விவாதத்தை தவிர்ப்பதற்காகவே ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* இந்திய ஜனநாயகம் பற்றி தவறான கருத்துகளை பேசிவிட்டுவந்து, சுதந்திரத்திற்காக ஏதோ சாதித்ததை போல் ராகுல் கவலையின்றி இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* அதானி குழும பங்குகள் விலையில் இயற்கைக்கு மாறாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை குறித்து ஒன்றிய அரசு ஏஜென்சிகள் இன்னும் விசாரணை நடத்தவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய ஜனநாயகத்தின்…

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது: ஜெயக்குமார் கடும் கண்டனம்..!

சென்னை: குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி மாவட்ட தலைமையால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தினேஷ் ரோடியின் பொறுப்பை பறித்து நேற்றிரவு 9 மணிக்கு அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தினேஷ் ரோடி,…

எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

சென்னை: எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள்,…

எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பா.ஜ.க. தலைவர் தினேஷ் ரோடியின் சஸ்பெண்டை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார். Source link

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போஸ்டர்கள் கட்சியை விட்டு வெளியேறு… எடப்பாடிக்கு வலுக்கும் எதிர்ப்பு: தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு மண்டலத்துக்கு பரவியது

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைப்பாளராகவும், அதிமுக ஆட்சியில் துணை முதல்வராகவும் ஓபிஎஸ் இருந்தாலுமே உட்கட்சி, கூட்டணி, தேர்தல் தொகுதி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் என அனைத்திலும் இபிஎஸ் அதிகாரமே கை ஓங்கி இருந்தது. இபிஎஸ்சுக்கு பின்னால் கொங்கு மண்டலம் எம்எல்ஏக்கள் மற்றும் அவரது சமூகத்தை சார்ந்த எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டு ஓபிஎஸ்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு…

1 7 8 9 10 11 161