Browsing: அரசியல்

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு – Dinakaran

கன்னியாகுமரி: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 4 நாள்கள் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வாக காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடர் சங்கமம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஐடா ஹெலன் வரவேற்றார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், நூர்முகமது, லீமாரோஸ், மார்க்சிஸ்ட்…

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொ. சிவபத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link

தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி அறிக்கை

மேற்கத்திய கலாச்சாரத்தால் நாடு கெட்டதா?.. தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள மேனாள் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவி , ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டே அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளர்போல் செயல்படும் வகையில் பேசி வருகிறார்; ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா-…

சொல்லிட்டாங்க…

* நேர்மையானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், ஊழல்வாதிகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது அவமானம். – பிரதமர் மோடி* அரசியலில் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது, அதற்கு அவர் பதில் கொடுத்து விமர்சனம் செய்வது இயல்பானது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைத்து, இந்திய மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் போக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* சென்னையில் சுரங்கப்பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக…

கனமழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு

சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப் பாதைகள், சாலைகள் நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல்,டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!.. பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலிறுத்தல்

சென்னை: விமானங்களுக்கான எரிபொருள் விலையும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைகளும், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க…

தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 298 வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முனுகோடு சட்டமன்ற தொகுதியில் 2,41,367 வாக்காளர்கள் உள்ளனர். 2018 தேர்தலில் முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோமட்டி ராஜகோபால ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3 ஆண்டுகளுக்கு மேல் எம்.எல்.ஏ.வாக இருந்த கோமட்டி ராஜகோபால ரெட்டி, பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில்…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை திமுக எம்பியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: திமுக அயலக அணி சார்பில் திமுக முப்பெரும் விழா குவைத்தில் நடந்தது. இதில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை கோரி நடத்தப்பட்டு…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியிறுத்தி குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு..!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற ஜனாதிபதியிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியிருந்தார். இதற்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப்…

ஐதராபாத் நடைபயணத்தில் ராகுலுடன் சென்ற நடிகை பூஜா பட்

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை நேற்று 56வது நாளாக  மேற்கொண்டார். இவரது நடைபயணத்தின் ேபாது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் நடைபயணம் செய்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் நேற்று நடைபெற்ற நடைபயணத்தில்…

1 70 71 72 73 74 161