Browsing: அரசியல்

நாளை பாமக மாவட்ட செயலாளர் கூட்டம் நடக்கிறது

சென்னை: நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெறுகிறது என்று பாமக அறிவித்துள்ளது. இது குறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை ஜன. 25ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த  தைலாபுரத்தில் உள்ள  பாமக அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்,…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் யார்?.. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை..!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தனியாக போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சுயேட்சை…

விருப்ப மனு பெற்ற பிறகு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: விருப்ப மனு பெற்ற பிறகு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் பூஜை இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்து கால்கோள் பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரசாரம்…

மோடிக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்: பெரும்பான்மை சமூகம் அல்லது விஐபியை நிறுத்த நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் இன்று காலை திடீரென குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் முக்கிய தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருங்கிய தொழில் அதிபர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்க உள்ளார். தொடர்ந்து அவர் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். விஐபி அல்லது ெமஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் களமிறக்கப்படுகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக மறைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31ம்…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். -ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள், பார்ப்போம்: டிடிவி.தினகரன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை அமமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிடிவி.தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என பேசினார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கேட்ட போதும் பாஜக தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனவும் அண்ணாமலையுடன் மாநில நலன் சார்ந்து பேசியதாக பன்னீர்செல்வம் கூறிச் சென்றதால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் பேசவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை பாஜக நிறுத்தினால் ஆதரவு என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்; இபிஎஸ், ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டி?: இரட்டை இலை கிடைக்காததால் தொண்டர்கள் குழப்பம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில், கடந்த 2021ம் ஆண்டு போட்டியிட்ட காங்கிரஸ்…

1 32 33 34 35 36 161