Browsing: அரசியல்

கேள்வி நேரம் இல்லாமல் இன்று சட்டப்பேரவை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். Source link

தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் … வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி : அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர்  கயல்விழி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித்திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு, *200…

சொல்லிட்டாங்க…

75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நேரத்தில், மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும்.- பிரதமர் மோடிஅரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிமதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யட்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோதமிழக ஆளுநர் அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி Source link

திமுக அரசு ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனை: அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 1 ஆண்டில் 20 ஆண்டு களுக்கான சாதனைகளை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த  2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில்…

மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டிற்கே தெரியும் : அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை

சென்னை: மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே செல்லூர்ராஜூ தான். அது நாட்டு மக்களுக்கே தெரியும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டபேரவையில் சிரிப்பலை எழுந்தது.சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசியது: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அந்த குளத்தில் லேசர் லைட் ஷோ நடத்த சுற்றுலா துறை முன்வர வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இளைஞராக உள்ளார். டாக்டராக உள்ளார். விஞ்ஞான…

இலங்கை மக்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியம்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது…

மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: சீமான் பேட்டி

சென்னை: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது, அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மனிதனை, மனிதன் சுமப்பது…

ஐபிஓ விற்பனை இன்று துவங்குகிறது எல்ஐசி பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்ஐசி பங்கு விற்பனை இன்று தொடங்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுவதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் பங்குகளை விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 5 சதவீத பங்குகள் விற்று ரூ.70,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் 3.5 சதவீத பங்குகள் விற்று ரூ.21,000 கோடி நிதி திரட்டப் போவதாக ஒன்றிய அரசு மாற்றி அறிவித்தது. எல்ஐசி…

தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. Source link

தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் நடத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்; அமைச்சர் தகவல்: செல்வபெருந்தகை பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். செல்வ பெருந்தகை (காங்கிரஸ்): மனிதனை மனிதன் சுமப்பது தடுக்க வேண்டும். திருஞான சம்பந்தர் பல்லாக்கில் ஏறியபோது அப்பர் எங்கே என்று கேட்டார். அப்போது பல்லாக்கு சுமந்த அப்பர், இங்கே இருக்கிறேன் என்று குரல் கொடுத்தார். உடனே திருஞான சம்பந்தர் பல்லக்கில் இருந்து இறங்கினார். நீங்கள் என் பல்லக்கை சுமக்கலாமா என்று கேட்டார். பின்னர் அவர் நான் இனி…

1 155 156 157 158 159 161