நாடோடிச் சித்திரங்கள்: `பயணியை கதை சொல்லியாக மாற்றிய இடும்பி வனம்’ | பகுதி 42 | Nadodi chithirangal, a travel to Idumbi vanam, Part 42
மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதற் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்து பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கொள்வது போல் கிறீச்சிட்டு பேசின. வானம் முழுவதுமாக வெளுத்து விடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் துவங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பது போல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால்…









