Browsing: ஆரோக்கியம் | Health

கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு அதிகரித்துள்ளதா? மருத்துவர்கள் தரும் விளக்கம்! | Are heart attacks on the rise after covid?

சமீப காலமாக, மாரடைப்பால் இளம் வயதினர் இறக்கும் செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பின்னர் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இத்தகைய மரணங்களுக்கான காரணம் புதிராகவே உள்ளது. கடந்த மாதம் சென்னையில்‌ பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4- 5%…

Doctor Vikatan: வியர்வையோடு இருக்கும்போது குளிக்கக்கூடாது என்பது உண்மையா? |Doctor Vikatan: Is it true that you should not take a bath when you are sweating?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாசூழல் மாசுள்ள வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வந்த உடனேயோ, உடற்பயிற்சியோ, வேறு வேலைகளோ செய்துவிட்டு வந்த பிறகோ வியர்வையோடு அப்படியே இருப்பது மிகவும் தவறு. உடனடியாகக் குளிக்க வேண்டியது மிக முக்கியம். வியர்வையோடு சருமத்தில் பாக்டீரியா நீண்ட நேரம்…

Doctor Vikatan: புரையேறும்போது தலையில் தட்டுவது சரியா? | doctor vikatan – regurgitation issue while eating

அதுவே பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு பக்கம் செயலிழந்திருக்கும். அதனால் அவர்களுக்கு ஒரு பக்கம் குரல்நாண் வேலை செய்யாது. அதனால் அவர்கள் சாப்பிடும்போது எப்போதுமே உணவுத்துகளோ, தண்ணீரோ நுரையீரலுக்குள் போய், அங்கே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மற்றபடி ஒருமுறை புரையேறி, அதனால் உயிர் போவது என்பது மிகவும் அபூர்வம். பெரிய உணவுத்துகளோ, வேறெதுவுமோ போய் உணவுக்குழாயை அடைத்தால்தான் அப்படி நடக்கக்கூடும். உணவுத்துகளோ, தண்ணீரோ மூச்சுக்குழாயின்மேல் படும்போது உடனே அதை மூடுவதற்கான பாதுகாப்புத் தன்மை அதற்கு இயல்பிலேயே இருப்பதால்…

கட்டு விரியன் பாம்பு கடித்து மூளைச் சாவடைந்த இளைஞர் மீண்டது எப்படி? – விவரிக்கும் மருத்துவர் | Youth recovered from snake byte

இது குறித்து லியாகத்தின் தந்தை முகமது கௌஸ், “என் மகன் ஐ.டி.ஐ முடித்துவிட்டு சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இரவுப் பணிக்குச் சென்றிருந்தபோது ரவுண்ட்ஸ் முடித்துவிட்டுத் தூங்கியிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரின் இடுப்புப் பகுதியில் கடித்துள்ளது. பிறகு பாம்பு அவர் மீது ஊறிச் சென்றதில் சுதாரித்துள்ளார். பாம்பு சென்றதைப் பார்த்துவிட்டு எழுந்துள்ளார். இடுப்புப் பகுதியில் ரத்தம் வர, பாம்புக் கடித்ததை உணர்ந்து கிணத்துக்கடவு பகுதி வரை, இருசக்கர வாகனத்தில்தான்…

`இனி வெள்ளைநிற ஷார்ட்ஸ் இல்லை' – மாதவிடாய் கசிவால் கவலைப்பட்ட கால்பந்து வீராங்கனைகள் வரவேற்பு!

விளையாடுபவர்களின் உடை என்பது கச்சிதமாகவும், விளையாடும்போது அசௌகர்யத்தை ஏற்படுத்தாதவகையிலும் இருக்க வேண்டும். விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்கள் என்றால், உடையில் கூடுதல் கவனம் வேண்டும். மாதவிடாய் குறித்த சிக்கல்களையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. கால்பந்து இந்நிலையில், முதன்முறையாக நியூஸிலாந்தின் மகளிர் தேசிய கால்பந்து அணியில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் உள்ள சீருடை இருக்காது என அந்நாட்டின் கால்பந்து சங்கம் திங்கட்கிழமையன்று அறிவித்துள்ளது.இது குறித்து கூறுகையில், `வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்திருக்கும்போது மாதவிடாய் கசிவுகள் குறித்து, சில வீராங்கனைகள்…

கர்ப்பிணிகள் குடிக்கும் நீரில் லித்தியம், குழந்தைகளுக்கு ஆட்டிசத்துக்கான ஆபத்தா; ஆய்வு சொல்வதென்ன?| Lithium In Drinking Water leads to Risk Of Autism

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படாத 63,681 குழந்தைகளுடன், 12,799 ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒப்பீடு செய்தனர். லித்தியம் அளவுகளைக் காலாண்டுகளாக அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பகுதி மதிப்புகளைப் பிரித்து ஆய்வு செய்தனர். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்… *வீட்டுக்குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்து, அதை கர்ப்பிணிகள் குடித்தால், இது நரம்பியல் வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு முக்கிய மூலக்கூறு பாதையை பாதிப்பதோடு, மன வளர்ச்சி குறைபாட்டையும் (ஆட்டிசம்) ஏற்படுத்தவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆட்டிசம் |Autism*எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின்…

13 குழந்தைகளின் தந்தைக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை; வெற்றியில் முடிந்த நீண்ட போராட்டம்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமாதையன் (45). இவரின் மனைவி சாந்தி (42). விவசாயத் தொழிலாளிகளான இத்தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 13-வது முறையாக கர்ப்பமான சாந்திக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவல் அறிந்து சென்ற ஈரோடு மாவட்ட மருத்துவத் துறையினர் சின்னமாதையனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து…

இசபெல்ஸ் மருத்துவமனையில் அலட்சியத்தால் மரணமா? சுமந்த் சி. ராமனின் பதிவும் நிர்வாகத்தின் பதிலும்!

சென்னையில் உள்ள செயின்ட் இசபெல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல் அலட்சியம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக, சுமந்த் சி ராமன் செய்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மழுப்பலான பதிலை அளித்துள்ளது.அரசியல் விமர்சகராகவும் மருத்துவராகவும் அறியப்படுவர் சுமந்த் சி ராமன். இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் மருத்துவ அலட்சியம் காரணமாக என் ஊழியர் ஒருவரை இழந்தேன். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில்…

ம.பி: சகோதரனுடன் சண்டை: ஆத்திரத்தில் செல்போனை விழுங்கிய இளம்பெண்! – என்ன நடந்தது?| Girl quarrels with brother, swallows cellphone

மத்தியப்பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தன் சகோதரனுடனான சண்டையில் செல்போனை விழுங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை அறிந்த அவரின் குடும்பத்தார், உடனே அந்தப் பெண்ணை  குவாலியரிலுள்ள  ஜெய ஆரோக்யா மருத்துவமனைக்கு (ஜேஏஎச்) கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான், செல்போனை வெளியே எடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.அறுவை சிகிச்சைமேலும், அறுவை சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனைக்கு  பெண்ணைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கையும் வேகமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய மருத்துவர்குழு,…

1 97 98 99 100 101 211