இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வணக்கம் என்று தமிழில் பேசத் தொடங்கிய பிராவோ, “ரகசியம் ஒன்றுமில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களும் வெளியாகி விட்டது. நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகச் செயல்படும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டேன். புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யத் துவங்கும் எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கிய சி.எஸ்.கே நிர்வாகக் குழுவிற்கு இந்த தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாகச் சென்னையில் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் போல உங்கள் ஆசியையும் ஆதரவையும் எனக்குத் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுக்கு ஒரு கசப்பான தருணம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எல்லாவற்றிலும் என்னைத் தொடர்ந்து ஆதரிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சென்னை அணிக்காகப் பல ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி, தன் பேட்டிங் மற்றும் பவுலிங்கால் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் பிராவோ.