அதைத் தொடர்ந்து, இந்திய ஜூனியர் ஒற்றையர் தொடரில் முதலிடம் பிடித்தார். இப்போது, 2025-ம் ஆண்டு ஆயுஷ் ஷெட்டிக்கு சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரில் முன்னாள் உலக சாம்பியன்கள் லோ கீன் யூ மற்றும் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோரைத் தோற்கடித்து அரையிறுதி வரை முன்னேறினார்.
கடந்த மாதம் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிவரை முன்னேறினார்.
தற்போது, அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

பேட்மிண்டனில் 20 வயதிலேயே இந்தியாவின் நம்பிக்கையாக வளர்ந்துவரும் ஆயுஷ் ஷெட்டியை இப்போது பலரும், அவரின் ஆட்டத்திறன் மற்றும் உயரத்தை (உயரம் 6 அடி 4 இன்ச் ) வைத்து 2024 ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்செல்சனுடன் (உயரம் 6 அடி 4 இன்ச்) ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
எதுவாகினும் ஒப்பீடுகளையெல்லாம் கடந்து பேட்மிண்டனில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க ஆயுஷ் ஷெட்டிக்கு வாழ்த்துகள்!