விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளில் பாதி பேர் இந்த இரண்டு இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
மீதமிருப்பவர்கள், நீச்சல் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரிலுள்ள பிற தங்குமிடங்களில் தங்குவார்கள்” என 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐச்சி – நகோயா விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் கசுஹிரோ யாகி, “விளையாட்டு வீரர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களைத் திருப்திப்படுத்தும் அளவில் சேவை வழங்க விரும்புகிறோம்.
“மிதக்கும் கிராமம்’ பயணக் கப்பல் மற்றும் கொள்கலன் வீடுகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. ஆனாலும், அவை 10 நிமிடங்களில் பேருந்தில் செல்லக்கூடிய தொலைவில் மட்டுமே உள்ளன.

எனவே, விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் பழகுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அப்பகுதியில் ஒரு மீன் காட்சியகம் மற்றும் பல்வேறு வித பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
வீரர்கள் ஓய்வெடுக்கவும், ஒன்று சேர்ந்து நேரம் செலவிடவும் இந்த இருப்பிடம் சிறப்பாக அமையும்.” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய கசுஹிரோ யாகி, “ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது இன்னுமே கூட இங்கு விழிப்புணர்வு இல்லை.
ஜப்பானில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் குறித்து அறியாதவர்கள் யாருமில்லை என நினைக்கிறேன்.