Ashwin : ‘TNPL இல் நடுவருடன் வாக்குவாதம்; களத்தில் ஆவேசம்!’ – அஷ்வின் செய்தது தவறுதான் – ஏன் தெரியுமா?

Share

தொழில்நுட்பங்களால் கூட 100% துல்லியமான முடிவை அளிக்க முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் ‘Umpires Call’ என்கிற பதத்தை வைத்திருக்கிறார்கள். நடுவரின் முடிவு சரியோ தவறோ அதை மதித்துதான் ஆக வேண்டும். அப்படியில்லாமல் அஷ்வின் மாதிரியான அனுபவ வீரரே இப்படியெல்லாம் ரியாக்ட் செய்வது நடுவரின் முடிவுகளை அவமதிக்கும் செயலாகத்தான் பார்க்க முடியும்.

மேலும், அஷ்வின் இதை TNPL போன்ற உள்ளூர் லீகில் செய்கிறார். சுற்றி முற்றி இளம் தமிழக வீரர்கள் சூழ்ந்திருக்கையில், அஷ்வினின் இந்த செயல் நிச்சயமாக தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும்.

‘Practice What You Preach’

மேலும், அஷ்வினின் இந்த ரியாக்சன் அவர் நம்பும் கூற்றுக்கே எதிரானதாக இருக்கிறது. நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் சமயங்களில் அஷ்வின் என்ன பேசுகிறார் என்பதைப் பாருங்கள். ‘நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறை விதிகளின்படி சரியே. அதனால் பௌலரின் மீது தவறே இல்லை.’ என்பார். மிகச்சரியான பார்வை இது. ஆனால், அதேதானே இங்கேயும் பொருந்தும். நடுவரின் முடிவுதான் இறுதி என்கையில் அதை ஏற்றுக்கொண்டுதானே செல்ல வேண்டும்? அதைவிடுத்து இப்படி தவறான முன்னுதாரணமாக மாறி நிற்பது ஏன்? Practice What You Preach..Ashwin!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com