இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில் ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதாவது, “ கிரிக்கெட் அணியில் பொறாமை எந்த அளவுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள், அணுகுவார்கள்.
நாம் உலகத்தை எப்படி அணுகுகிறோமோ அதுபோல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என அவர்கள் நினைப்பார்கள்.
இதில் சிலர் உங்களுக்கு என்னை பார்த்து பொறாமை இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதைப் பற்றி உங்களுக்கு பதில் சொல்ல முடியுமா என்று அஸ்வின் கேட்டிருக்கிறார்.