ஆஷா போஸ்லே 1981 இல் `உம்ராவ் ஜான்’ படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் `இஜாசத்’ படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார். 2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷனையும் பெற்றார்.
2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப்ஸ் குட் ‘படத்தின் `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான் தான் அவர் கடைசியாக பாடிய ஹிந்தி பாடல் ஆகும்.
16 வயதில் காதல்:
ஆஷா போஸ்லேவின் 80 ஆண்டு கால வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. போஸ்லே தனது 16 வயதில் தனது தனிப்பட்ட செயலாளரான கணபத்ராவ் போஸ்லேவை திருமணம் செய்தார். அவருக்கு அவருடன் மூன்று குழந்தைகள் இருந்தனர், ஆனால் கணவர் மற்றும் மாமியார் பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதால் போஸ்லே 1960 இல் கணபத்ராவிடம் இருந்து பிரிந்தார்.
கர்ப்பமாக இருந்தபோது தன் கணவர் வீட்டை விட்டு வெளியில் வந்தார். இது குறித்து ஒரு முறை ஆஷா போஸ்லே கூறுகையில்,”எங்களது திருமணம் காதல் திருமணம். இதற்காக லதா அக்கா என்னிடம் நீண்ட நாட்களாக பேசவில்லை. அவர் எங்களை ஏற்கவில்லை. ஆனால் கணவன் வீட்டில் துன்புறுத்தல், கொடுமை காரணமாக என் இளைய மகன் ஆனந்த் வயிற்றில் இருந்தபோது என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.
நான் என் அம்மா, சகோதரிகள் மற்றும் சகோதரனிடம் திரும்பிச் சென்றேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை” என்று கூறினார்.
தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, ஆஷா போஸ்லே பின்னர் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனை 1980 இல் திருமணம் செய்துகொண்டார். தன் குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஆஷா போஸ்லே இன்று காலமானார்.