`Dev.D”, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.
நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘மகாராஜா’, ‘Rifle Club’ படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக, பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில், ‘பாலிவுட்டில் பிறக்காமல், தமிழ்நாடு, கேரளா எனத் தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்’ என்று பேசியிருந்தார் .

இந்நிலையில் பான் – இந்தியா திரைப்படங்கள் என்பது ஒரு பெரும் ஊழல் என்று பேசியிருக்கும் அனுராக் காஷ்யப் , “பான் இந்தியா என்ற பெயரில் பெரிய பட்ஜெட்டில் 3-4 ஆண்டுகள் படமெடுக்கிறார்கள்.
படத்திற்கான பட்ஜெட் பணத்தைப் படமெடுப்பதில் செலவழிக்கிறார்களோ இல்லையோ, தேவையில்லாத பெரியப் பெரிய செட்கள் போடுவதிலேயே செலவழிக்கிறார்கள் சிலர்.