ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டும், அதன் பிறகான சோதனையில் அது உறுதியானதும் விவாதப்பொருளாக இருக்கிறது. இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டி இதனை மறுத்துவருகிறார். அடுத்தகட்ட சோதனைகளும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் அமுல் (Amul) பிராண்ட் நெய் என எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அமுல் நிறுவனம், தங்கள் நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில நபர்கள் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக, அகமதாபாத் காவல் நிலையத்தில் ஏழு பேர் மீது புகாரளித்தது.