“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது” – டி.டி.வி.தினகரன் காட்டம் | ttv dinakaran slams dmk, edappadi palanisami in recent commission reports

Share

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதனை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் உண்மை அது தான். அறிக்கையை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர்.

ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

நீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. இதை சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இந்த அறிக்கையில் அரசியல் இருக்கிறது” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com