மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி?

Share

மெக் டொனால்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய ஃபாஸ்ட் ஃபுட் ஜாம்பவான்கள் உள்ளூர் உணவகங்களிலேயே சாப்பிட்டுப் பழகியிருந்த இந்தியர்களுக்குத் தங்கள் துரித உணவுகளை வழங்கி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், துரித உணவுகள் பிராந்திய சுவைகளை நோக்கி அதிகமாக நகர்ந்தன. பிபிசியின் ஸோயா மத்தீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் இதுகுறித்த செய்தியை வழங்குகிறார்கள்.

1996-ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் தனது முதல் கடையை டெல்லியின் உயர்தர பகுதியில் திறந்தபோது, மேற்கத்திய துரித உணவு என்பதே புதுமையானதாக இருந்தது.

பிறகு, அடுத்தடுத்த கிளைகள் உருவாக, மேற்கத்திய துரித உணவுகள் தம் சுவைகளை உள்ளூர் சுவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டது.

எனவே, முட்டை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட மயோனைஸ், பன்றி இறைச்சியோ மாட்டு இறைச்சியோ இல்லாத பர்கர்கள் ஆகியவை அத்தகைய மாற்றங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டவையே.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com