சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரு இளம் பெண்களின் சடலம் மாறிய சம்பவம் – என்ன நடந்தது?

Share

ஸ்டான்லி மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இறந்த இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்துக்கு மாற்றி வழங்கப்பட்டு, அச்சடலத்துக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வேறொரு குடும்பத்தினரிடம் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தன் மகள் உயிரிழந்த சோகத்தில் இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பெண்ணின் தந்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இறந்த பெண்ணை குடும்பத்தினர் தவறாக அடையாளம் கண்டதால் இந்த குழப்பம் நேர்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். என்ன நடந்தது?

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏடூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அனுஷ்கா. இவர் இந்தாண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்கு தயாராக இருந்துள்ளார். அதே போன்று, சென்னை மணலியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, இவர் இரண்டாமாண்டு கல்லூரி மாணவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அனுஷ்கா, பிரியதர்ஷினி இருவரும் வெவ்வேறு காரணங்களால் இருவேறு சம்பவங்களில் தற்கொலை மூலம் சமீபத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, தொடர்புடைய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com