தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 461 எம்பிபிஎஸ் சீட் குறைகிறதா? புதிய சர்ச்சையின் பின்னணி

Share

திமுக, தவெக, மருத்துவ இடங்கள், தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யூஜிசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் “அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது. அதனால் தான் தடையில்லா சான்று கேட்ட எந்த ஒரு விண்ணப்பத்திற்கும் திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்படவில்லை” என்கிறார்.

அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதால் மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை, எளிய, நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எந்த வகையில் இழப்பு ஏற்படும்? கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சர்ச்சை தொடங்கியது எப்போது?

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com