பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் – பணம் தராததால் வெறிச்செயல்!

Share

இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. செல்வராஜ் பணம் கேட்டு பிரச்னை செய்யும் போதெல்லாம் இரண்டு மகள்களும் தாய் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். நேற்று இரவும் இதே போல் பணம் கேட்டு செல்வராஜ் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். பணம் தராத ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ மள மளவென பரவி எரிய மூன்று பேரும் அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த மூவரையும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தாய் மற்றும் இரண்டு மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com