இரு அணிகளாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்தது – இதுவரை என்ன நடந்தது?

Share

இரு அணியாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்து - சி.வி.சண்முகம் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக தற்போது ஒன்றிணைந்துள்ளது.

இன்று (மே 27) எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர். பின்னர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட இருதரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்க கோரி கடிதம் வழங்கினர்.

மேலும், கொறடா விவகாரம் தொடர்பாக இருதரப்பும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கிய கடிதத்தையும் திரும்பப் பெற்றனர். ஆனால், இந்த நிகழ்வுகளில் எஸ்.பி. வேலுமணி தரப்பின் முக்கிய முகமாக இருந்த சி.வி. சண்முகம் கலந்துகொள்ளவில்லை.

இது குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டபோது, சி.வி. சண்முகம் தங்களுடன் தான் இருப்பதாக கூறினார்.

அத்துடன் எஸ்.பி. வேலுமணி மற்றும் சில அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் சி.வி. சண்முகத்தை நேரில் சந்திக்க சென்றுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com