ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், முருகனின் கொலை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் தணிகைமலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் என்ற 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.