LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" – தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

Share

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி.

இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அணியை, 70 ரன்கள் சேர்த்து மீட்டு ஆட்டநாயகன் விருதை வாங்கி இருந்தார் டெல்லி அணி வீரர் சமீர் ரிஸ்வி.

இந்தப் போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில்,“ரன்-அவுட் போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை மறந்துவிட்டு முன்னேறுவதே சிறந்தது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் பின்னடைவுதான் ஏற்படும்.

​இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் என்பது மிகக் குறைவு. அதனால் எதிரணிக்கு பெரிய நெருக்கடி தர முடியவில்லை.

Rishabh Pant
Rishabh Pant

போதிய ரன்கள் இல்லாததால்தான், பந்துவீசத் தெரிந்த ஒரு பேட்ஸ்மேனை ‘இம்பாக்ட் பிளேயர்’ ஆகக் கொண்டு வந்தோம். நடு ஓவர்களில் அதிரடி காட்டவே பூரனுக்கு முன்னால் பதோனியை இறக்கினோம்.

இடது-வலது காம்பினேஷனை முயற்சித்தோம், ஆனால் நான் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. நான் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நன்றாகச் செயல்பட்டனர். அது ஒரு நல்ல அறிகுறி. ஆனால் 20 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்தது பாதிப்பை ஏற்படுத்தியது. விக்கெட்டுகளை எடுக்க முயன்றபோது அவர்கள் சுலபமாக ரன் சேர்த்துவிட்டார்கள். வரும் போட்டிகளிலும் நான் டாப் ஆர்டரில் விளையாடுவதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம்” என்று கூறிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com