அதிமுக நெருக்கடி: ‘ஓபிஎஸ் அனுதாப அரசியல் செய்கிறாரா?’ – அவரது சுற்றுப்பயணம் பலனளிக்குமா?

Share

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு அதிகரித்திருந்தாலும், அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக, அவருடைய ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்தாலும், கட்சியின் தொண்டர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த சுற்றுப்பயணம் பயனளிக்கும் என்றும் கோவை செல்வராஜ் கூறுகிறார்.

பின்னணி என்ன?

கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்-ஐ முழுமையாகப் புறக்கணித்தனர். அதோடு, மேடையில் அவர் இருந்தபோதே, அவருக்கு எதிராக பொதுக்குழுவில் பலர் ஒற்றைத் தலைமை தான் கட்சிக்குத் தேவை என்று குறிப்பிட்டு, ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்டினர்.

ஒரு கட்டத்தில், இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில், தான் தனித்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டபோது, ஓபிஎஸ் மேடையில் இருந்து கிளம்பினார். அவர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது அவருடன் வருவதற்கு ஒரு சிறிய கூட்டம் கூடச் சேரவில்லை என்பதை நேரலைக் காட்சிகளில் பார்க்க முடிந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com