ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அணி வீரார்களிடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.
இது சிஎஸ்கே ரசிகர்களிடயே வருத்ததை ஏற்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய ஜடேஜாவிற்கு பிரியாவிடை கொடுப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் ஆரம்ப காலத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜடேஜா, “இது என் சொந்த வீட்டுக்குத் திரும்புவது மாதிரி தான். ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு முதல் வெற்றியைத் தந்த அணி. இப்போது மீண்டும் அந்த அணியில் சேர்வதில் மிகுந்த மகிழ்ச்சி!” என்று கூறியிருந்தார்.