நீதிபதியின் மீது புகார் எழுந்தால் என்ன செய்ய முடியும்? தனக்கு எதிரான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கலாமா?

Share

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்

பட மூலாதாரம், Getty Images

ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க முடியுமா, நீதித்துறை அதை அனுமதிக்கிறதா? இந்த கேள்வி தற்போது எழுவதற்கு காரணம் இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன், வலதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான சில வழக்கின் உதாரணங்களையும் குறிப்பிட்டு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கில், ஜூலை 24ம் தேதி நீதிபதி சுவாமிநாதன் இருந்த அமர்வின் முன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரானார். அப்போது அவரிடம், நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன் செயல்படுகிறார் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா என்று வழக்காடு மன்றத்தில் வாய்மொழியாக கேட்கப்பட்டது. இதற்கு வாய்மொழியாக அதே இடத்தில் பதில் அளிக்க மறுத்த வாஞ்சிநாதன், எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்பின் பதில் அளிப்பதாக கூறினார்.

அதன் பின், வாஞ்சிநாதனுக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய எழுத்துப்பூர்வ ஆவணத்தில், “வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவரது நடத்தை காரணமாக பார் கவுன்சிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது கவனத்துக்குரியது. இடைநீக்கம் திரும்பப் பெற்ற பிறகு அவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நீதித்துறையை தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். சமூக ஊடகம் முழுவதும் அவர் வீடியோக்கள் உள்ளன. நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது வேறு, நீதிபதிகளை புறங்கூறுவது வேறு” என்று கூறி பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மேற்கோள்காட்டப்பட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com