Yash Dayal; RCB; திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக தன்மெது புகாரளித்த யஷ் தயாள் பெண்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

Share

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாகவும் ஜூன் 21-ம் தேதி மாநில முதல்வர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்திருந்தார்.

அந்தப் புகாரின்படி யஷ் தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

யஷ் தயாள் | Yash Dayal

யஷ் தயாள் | Yash Dayal

இந்தப் பிரிவில், யஷ் தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரும்.

ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் குற்றச்சாட்டு எழுப்பியது முதல் BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவானது வரை யஷ் தயாள் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், தனக்கெதிராகப் புகாரளித்த பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யுமாறு பிரயாக்ராஜ் காவல்துறையில் யஷ் தயாள் புகாரளித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com