டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.
அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.

மறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுத்தாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கொதித்தனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் பாஜக அரசுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தது.
பின்னர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, உடனடியாக இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், வாகனம் வெளியேற்றும் காற்று மாசின் அடிப்படையில் அத்தகைய வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர்.