ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் முல்டர். எல்லோருக்கும் இது சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது என்பது மிகையல்ல
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது.
அதனால், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் குவித்தது.
ஆட்ட நேர முடிவுக்குப் பிறகு 400 ரன் சாதனையை எளிதில் முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஏன் என்பது குறித்து பேசிய முல்டர், “முதலில், எங்கள் அணிக்கு அந்த ரன் போதுமானதாக இருந்தது. எனவே, நாங்கள் பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன்.
இரண்டாவது, பிரையன் லாரா ஒரு ஜாம்பவான். அத்தகைய அந்தஸ்திலுள்ள ஒருவர், இந்தச் சாதனையைத் தக்கவைக்கத் தகுதியானவர்.
இதேபோன்று மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால், அப்போதும் இதையேதான் செய்வேன்.
டிக்ளேர் செய்வது பற்றி சுக்ரி கான்ராட்டிடம் (தென்னாப்பிரிக்கா தலைமைப் பயிற்சியாளர்) பேசினேன், அவரும் இதைத்தான் உணர்ந்தார். எனவே, ஜாம்பவான் லாரா இதைத் தக்கவைக்கத் தகுதியானவர்” என்று கூறியிருக்கிறார்.