முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசூட் ஓய்வுப்பெற்றார். விதிமுறைகளின் படி, தலைமை நீதிபதிக்கு 8-வது வகை பங்களாக்கள் ஒதுக்கப்படும். அவரது ஓய்விற்கு பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு, வாடகையற்ற 7-வகை பங்களாவிற்கு மாற்றப்படுவார்கள்.

ஆனால், சந்திரசூட் ஓய்வு பெற்றப் பிறகும் கூட, 8-வகை பங்களாவிலேயே தங்கி வருகிறார். காரணம், அவருக்கு பிறகு, தலைமை நீதிபதி பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா மற்றும் கவாய் அவர்கள் முன்பு இருந்த வீட்டிலேயே இருந்துகொள்வதாக கூறிவிட்டனர்.
சந்திரசூட்டும் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அதே வீட்டில் தங்கி கொள்ள அனுமதி கேட்டிருந்தார்.