திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு: 5 காவல்துறையினர் கைது – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

Share

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு, அஜித்குமார் வழக்கு

பட மூலாதாரம், SCREENGRAB

படக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் வீடியோ ஒன்றை காட்டியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு, அஜித்குமார் தாக்கப்பட்ட இடத்திலிருந்து ஏன் ரத்தக்கறை சேகரிக்கவில்லை, அஜித்குமாரை எதை வைத்து அடித்தனர், காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கு ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் என்ன நடக்கிறது?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com