சென்னை வானிலை: மழை எத்தனை நாட்களுக்குத் தொடரும்?

Share

சென்னை வானிலை, கனமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நேற்று (டிச. 11) முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் மழை தொடர்கிறது. அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்துவருகிறது.

மேலும், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com