சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஐ பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா பங்கேற்பது குறித்து பல சலசலப்புகள் ஏற்பட்டுவிட்டன.
26/11 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களைத் தவிர இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிரெதிராக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் போட்டிகள் ஹைப்ரீட் முறையில் இலங்கையில் நடைபெற்றன. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரீட் முறையில் போட்டிகளை நடத்த முடியாது என இழுத்தடித்துவந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
தற்போது ஹைபிரீட் முறையில் போட்டிகளை நடத்த ஒத்துக்கொண்டாலும் அதற்காக சில நிபந்தனைகளை வைத்துள்ளனர்.