ஐ.பி.எல் 2025-கான மெகா ஏலம் நிறைவடைந்திருக்கிறது. பல ஆச்சரியங்கள் நடந்துள்ள இந்த ஏலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த நம் பார்வையை மாற்றுவதாக அமைந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பண்ட் 27 கோடிக்கு எடுக்கப்பட்டது புதிய சாதனை. அவரைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் முறையே 26.75 கோடி மற்றும் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். தக்கவைக்கப்படும் வீரராக விராட் கோலியை ஆர்.சி.பி அணி 21 கோடிக்குத் தக்கவைத்திருக்கிறது.