மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷின்டேவா அல்லது பாஜகவைச் சேர்ந்த ஒருவரா? அடுத்த முதல்வர் யார்?

Share

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போக்கை பார்க்கும் போது, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற வாய்ப்புள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் நிலை தென்படுகிறது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 145 இடங்களை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் பாஜக கட்சி சார்பாக 149 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் இணையதள தரவுகளின்படி, இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இரண்டாவது இடத்திலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. அதாவது மகாயுதி கூட்டணி மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களை வெல்லும் நிலையில் இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் ‘இப்போது ஏக்நாத் ஷிண்டேதான் எங்கள் முதல்வர்’ என்று கூறிவந்த நிலையில், தற்போது இந்த கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com