IPL 2025 :’6 வீரர்களை ரீட்டெய்ன் செய்யலாம்;CSK க்கு சாதகமான விதி?’- பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | IPL 2025 : IPL Retention Rules Official Announcement

Share

4. வீரர்களுக்கு போட்டி ஊதியம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்ச ரூபாய் போட்டியில் ஆடும் வீரர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

5. ஏலத்துக்கு தங்களின் பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களால் ஏலத்தில் பங்கேற்க முடியாது.

6. ஏலத்தில் பெயரை பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட பின்னர் சீசன் தொடங்குவதற்கு முன்பே ஒரு வீரர் சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவதற்கும் ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.

7. ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய வீரர் கடைசியாக சர்வதேச போட்டிகளில் ஆடி 5 வருடங்களாகியிருக்கும் பட்சத்தில் அவர் சர்வதேச போட்டிகளில் ஆடாத (Uncapped) வீரராக கருதப்படுவார்.

8. 2025-27 வரையிலான சீசன்களிலும் Impact Player விதிமுறை தொடரும்.

கடைசியாக சர்வதேச போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட வீரரை Uncapped வீரராக கருத வேண்டும் என்கிற விதிமுறையை சென்னை அணிதான் விரும்பி கேட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. தோனியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சென்னை அணி இந்த விதிமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டி கேட்டதாக தெரிகிறது.

இந்த விதிமுறைகளை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com