துருக்கி தேர்தல்: அதிபர் எர்துவான் முன்னுள்ள அரசியல் சவால்கள்

Share

அதிபர் எர்துவான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன

துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிபர் எர்துவான் ஆட்சியில் துருக்கி ஒரு சர்வாதிகார நாடாகவே மாறிப்போன நிலையில், அந்த நிலையை மாற்ற எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

வேகமாக அதிகரிக்கும் பண வீக்கம், இரண்டு நிலநடுக்க பாதிப்புக்களில் 50,000 பேர் உயிரிழந்தது போன்ற பிரச்சினைகளின் தாக்கம் காரணமாக எர்துவான் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com