எந்நேரமும் போன், டேப்லட், வீடியோ கேம்ஸ் என இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வெளிப்படும் ஃபிளாஷிங் லைட்டுகள் வலிப்பைத் தூண்டிவிடக்கூடும். வலிப்பு பாதிப்பு உள்ளவர்கள், அசையும் இயந்திரங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
உயரமான இடங்களில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரின் அருகில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் என்றால் சின்ன பேசின் அளவு தண்ணீர்கூட இவர்களுக்கு ஆபத்தானதுதான். வலிப்பு வரும்போது அந்தத் தண்ணீரில் விழுந்தால்கூட மூச்சு நின்றுபோய், உயிருக்கே ஆபத்தாகலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மற்றபடி இவர்களும் சாதாரண வேலைகளைச் செய்யலாம். வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம், குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். எல்லோரையும்போல சராசரி வாழ்க்கையை வாழலாம்.
இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்புநோய்க்கு மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. நம்பிக்கையை இழக்காமல் தரமான சிகிச்சையை மேற்கொண்டாலே நல்லதொரு வாழ்க்கை இவர்களுக்கும் சாத்தியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.