செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Share

சௌதி, இரான், இந்தியா

பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும் செயல் உத்தி கண்ணோட்டத்துடனும் பார்க்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் இது.

வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு பல முக்கியமான துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல அம்சங்களில் இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பெரும்பாலான வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்த உறவில் மிக முக்கியமானது எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகமாகும். இது தவிர, வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணிபுரிவதும், அவர்கள் தாயகத்திற்கு பணம் அனுப்புவதும் இந்த உறவின் முக்கிய அம்சங்களாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com