புறா எச்சங்களால் உயர் ரத்தஅழுத்த நிமோனியா அதிகரிப்பு? பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை | Hypertensive pneumonia due to pigeon droppings on the rise

Share

மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?

பொதுவாகப் பார்த்தால், புறாக்களின் செயல்பாடுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும், உண்மையில் அவை மனிதர்களுக்கு பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றின் உடலில் இருந்து உதிரும் இறகுகள் மூலம், மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

அடுத்து, புறாவின் எச்சங்களும் நோய்களை ஏற்படுத்தும். எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வாமை ஏற்பட்ட சில மணி நேரத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றும். இவை, சிலமணி நேரத்துக்கோ அல்லது சில நாள்களுக்கோ நீடிக்கும். நாள்பட்ட அறிகுறிகள் மெதுவாக உருவாகி, காலப்போக்கில் மோசமாகலாம்.

நோயின் பொதுவான அறிகுறிகளாக மூச்சுத்திணறல், வறட்டு இருமல், சோர்வு, அதிக காய்ச்சல், தசைவலி, நாள்பட்ட இருமல், எதிர்பாராத எடை இழப்பு உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியபடி புறா வளர்ப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com