தாமஸ் கோப்பை: சாம்பியன்களையெல்லாம் வீழ்த்தி புதிதாக ஒரு சாம்பியன் – சாதித்த இந்திய பேட்மிண்டன் அணி! | Indian badminton team scripted history in Thomas Cup

Share

ஒரு In & out க்கு சேலஞ்ச் செய்து இந்தோனேஷிய இணை தோல்வியடைய இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய இணை இந்த ஒரு புள்ளியை பற்றிக்கொண்டு முன்னேறியது. ஒரு லாங் ரேலியில் அடுத்து ஒரு புள்ளியை வியர்வை வடிய வாங்கினர். அடுத்து வெறித்தனமான ஸ்மாஷில் இன்னொரு புள்ளி. அடுத்து Unforced error-கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் கிடைக்க ஆட்டம் 21-21 என சமநிலைக்கு வந்தது.

2-0 என இப்போது இந்திய அணி முன்னிலை வகித்தது. இன்னும் ஒரு ஆட்டத்தை வென்றுவிட்டால் புது வரலாறே படைத்துவிடலாம் என்பதால் மூன்றாவது ஆட்டத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடியது. இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் இந்தோனேஷியா சார்பில் கிறிஸ்ட்டியும் மோதியிருந்தனர். தோனியின் வின்னிங் ஷாட்டை போல இந்த ஆட்டத்தை ஸ்ரீகாந்த் எந்த பிசிறும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்து வைத்தார். முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா முதல் செட்டை இழந்திருந்தது. ஆனால், இங்கே முதல் செட்டையே ஸ்ரீகாந்த் வென்றார். 8-2 என தொடக்கத்திலேயே மளமளவென புள்ளிகளை அள்ளினார். 21-15 என வென்றார்.

அடுத்த செட், இதை மட்டும் வென்றால் இந்தியா சாம்பியன். இதை மட்டும் தோற்றால் இந்தோனேஷியா சாம்பியன்ஷிப்பை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கிறிஸ்டி இந்த செட்டில் கொஞ்சம் கூடுதலாகவே போராடினார். அவரின் போராட்டம் போட்டியை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், வெற்றியைக் கொடுக்கவில்லை. 23-21 என கடைசி வரை சென்று ஸ்ரீகாந்த் வென்று கொடுத்தார். இந்தத் தொடரில் ஸ்ரீகாந்த் மட்டும்தான் எந்தப் போட்டியிலுமே தோற்கவில்லை. ஆடிய 6 போட்டிகளிலுமே வெற்றிதான். இறுதிப்போட்டியில் அவரை மட்டுமல்ல, இந்தியாவையே சேர்த்தும் வெல்ல வைத்தார். பேட்மிண்டனில் ஓர் அணியாக இந்தியா வெல்லும் மிகப்பெரிய தொடர் இது. அதுவும், நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அத்தனை பேரையும் சிதறவிட்டு வென்றிருப்பது, இந்திய விளையாட்டுத்துறைக்கே பெரும் பெருமையைச் சேர்த்திருக்கிறது.

இந்திய பேட்மிண்டன் அணி

இந்திய பேட்மிண்டன் அணி

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com