நடப்பு உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பு க்ரீம் பிஸ்கட் தியரி ஒன்றை முன் வைத்தார் தோனி. 2011ல் ஒரு நிறுவனத்தின் க்ரீம் பிஸ்கட் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 2022-ல் அதே க்ரீம் பிஸ்கட் மற்றுமொரு வெர்ஷனை வெளியிட்டிருக்க, இந்த ஆண்டும் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி தோனி பேசிய வீடியோ அப்போது பெரிய வைரல் ஆனது. அதற்கு ஏற்றார் போல அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது, இந்தியா தென்னாப்பிரிக்கா அணியிடம் தோற்றது, பாகிஸ்தான் அரை இறுதி வந்தது போன்ற பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் அரை இறுதியில் இங்கிலாந்து அணி க்ரீம் பிஸ்கட் தியரி கனவை களைத்துவிட்டது.
அதன்படி அப்படி என்னவெல்லாம் நடந்தது என்பதை தெரிந்துகொள்ள 1987ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்குப் போக வேண்டும். அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாகப் பந்துவீசிய போதும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இதனால் விரக்தி அடைந்த இம்ரான் கான் ஓய்வை அறிவித்தார்.
இப்போது மாதிரியே அப்போதும் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிறந்த வானிலை, மிகவும் கூர்மையான புகைப்பட கலைஞர்கள், முதன்முறையாக உலகக் கோப்பையில் வண்ண ஜெர்ஸிகள் என அந்த உலகக் கோப்பை கோலாகலமாக ஆரம்பித்தது.
பாகிஸ்தான் தன் முதல் ஐந்து போட்டிகளில் மூன்று தோல்வி ஒரு வெற்றி என்று இருந்தது. ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. அந்தக் கைவிடப்பட்ட போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியின் விளிம்பில்தான் இருந்தது.